For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்! பாட்னாவில் 13 பேர் கைது!

04:00 PM Jun 10, 2024 IST | Web Editor
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்  பாட்னாவில் 13 பேர் கைது
Advertisement

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பாட்னாவில் 4 தேர்வர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது.  இதில்,  23.33 லட்சம் பேர் பங்கேற்றனர்.  தமிழ்நாட்டில் சென்னை,  மதுரை,  திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நாடு முழுவதும் தமிழ்,  ஆங்கிலம்,  இந்தி,  தெலுங்கு,  கன்னடம்,  குஜராத்தி,  மராத்தி, ஒடியா,  அஸ்ஸாமி,  வங்காளம்,  உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில்,  விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று, தேர்வு முடிவுகள் இணையப் பக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 4) வெளியானது.  இதில் நாடு முழுவதும் மொத்தம் 13,16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!

இந்நிலையில், இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே பிகார் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்த பிகார் காவல்துறையினர்,  சிறப்புக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த விவகாரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிகார் காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிகார் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

"நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாட்னாவில் 4 தேர்வர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் பொதுப் பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்த ஒருவரும் கைதாகியுள்ளார்.

அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். கைதானவர்களிடம் இருந்து கோப்புகள் மற்றும் மின்சாதன பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வுக்கு முன்னதாக 35 பேருக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டது
கண்டறியப்பட்டுள்ளது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement