For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வு முறைகேடு: தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

01:54 PM Jun 14, 2024 IST | Web Editor
நீட் தேர்வு முறைகேடு  தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Advertisement

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 

Advertisement

நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத் தாள் கசிவு என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.  நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மறுதேர்வு எழுத விரும்பாதவர்களுக்கு கருணை மதிப்பெண் இன்றி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தேசிய தேர்வுகள் முகமை தொடந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத்,  சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் உள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து எதிர் மனுதாரர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இதேபோல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
Advertisement