For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் முறைகேடு விவகாரம்: பாட்னாவில் 3 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை!

02:29 PM Jul 18, 2024 IST | Web Editor
நீட் முறைகேடு விவகாரம்  பாட்னாவில் 3 மருத்துவ மாணவர்களிடம் சிபிஐ விசாரணை
Advertisement

நீட் முறைகேடு தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த 3 இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. 

Advertisement

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  இதனைத் தொடந்து இத்தேர்விற்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறியது.  இதேபோல், பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.

ஜார்க்கண்ட், குஜராத்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவர, இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மத்திய கல்வித் துறையின் பரிந்துரையின் பேரில் குஜராத் உட்பட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் கடந்த 23-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துமனையைச் சேர்ந்த 3 இளநிலை மருத்துவ மாணவர்களை சிபிஐ தடுப்பு காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இவர்கள் 2021 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்.  அவர்களின் அறையை சீல்வைத்த சிபிஐ அதிகாரிகள், நால்வருக்குச் சொந்தமான லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நேற்று இருவரை சிபிஐ கைதுசெய்தது. பீகாரின் பாட்னாவை சேர்ந்த பங்கஜ் குமார், ஜார்கண்டில் உள்ள ஹசாரிபாக்கை சேர்ந்த ராஜு சிங் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.  இவர்களிடம் நடந்த விசாரணையின் மூலம் பாட்னாவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலுடன்,  இந்த மாணவர்கள் தொடர்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. வினாத்தாள் கசிவில் தொடர்புடைய கும்பலுக்கு இந்த மாணவர்கள் தான், வினாத்தாளுக்கான விடைகளைக் கொடுப்பது போன்றவற்றை செய்து கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement