“நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் எனது தாய்...” - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார்.
கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப் 26) 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப். 24) மாலையுடன் முடிவடைகிறது.
இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் தாலியை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்று பேச்சு வந்தது. இந்த நாடு கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ளது. 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. உங்கள் தங்கத்தையோ அல்லது தாலியையோ காங்கிரஸ் பறித்ததா? போர் நடந்தபோது எனது பாட்டி இந்திரா காந்தி தனது தாலியையும், தங்கத்தையும் நன்கொடையாக அளித்தார். என் தாயின் தாலி இந்த நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.