For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் - மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

04:56 PM Jan 26, 2024 IST | Web Editor
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்   மருத்துவ செலவுக்காக ரூ 2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது அடையாளம் தெரியாத நபர்கள்  கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார். 

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று முன்தினம் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இவரை நோட்டம் விட்டுள்ளனர். மேலும் இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை நோட்டம் விடும் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் அடையாளம் தெரியாத நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று, மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதையும் படியுங்கள்:  2 பத்ம விபூஷண்… 1 பத்ம பூஷண்… 5 பத்மஸ்ரீ… – இந்திய அளவில் ஜொலிக்கும் தமிழர்கள்..!

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.  மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தயது.

இதனைத் தொடர்ந்து, நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு, மட்டுமல்லாமல் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.2 லட்சம் மருத்துவ உதவிக்காக வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி அறிவித்த ரூ.2 லட்சத்தை விருதுநகர் மாவட்ட செய்தியாளர் ஜெய்லானியிடம் வழங்கினார்.  மேலும் காயம் அடைந்த செய்தியாளர் நேசபிரபு விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகும் தெரிவித்தார்.

Tags :
Advertisement