For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்!

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.
12:05 PM Apr 11, 2025 IST | Web Editor
மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் குறித்து பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
Advertisement

விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஏப்.6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அவரின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், திமுக துணை பொதுச்செயலாளர் பதவியி ல் இருந்து பொன்முடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். மு.கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்"

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement