திடீர் உடல்நலக்குறைவு... அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த மே 8ம் தேதி திடீரென இலாகா மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து – மதுரையில் அதிர்ச்சி!
இதற்கிடையே, அன்றைய தினம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சளி பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவரது உடல்நிலை சீரானதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.