For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிக்ஜாம் புயல் : வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு..!

12:07 PM Dec 07, 2023 IST | Jeni
மிக்ஜாம் புயல்   வெள்ளம் பாதித்த பகுதிகளில் 3வது நாளாக முதலமைச்சர் ஆய்வு
Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இதையடுத்து,  மாநகராட்சி ஊழியர்களும்,  தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

இதையும் படியுங்கள் : ரூ.4000 கோடி செலவில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? - தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் சவால்

இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் 3வது நாளாக இன்று பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.

Tags :
Advertisement