For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவின்போது ஜெனரேட்டரை இயக்கிய மைக் செட் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
02:01 PM Mar 01, 2025 IST | Web Editor
கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
Advertisement

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள சூசையப்பர்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மைக்செட் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த சூழலில், சிவகங்கை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டை குருநாதன் கோயிலில் இன்று (மார்ச்1)  மாசி களரி திருவிழா நடைபெறுகிறது. இந்த கோயிலில் மைக்செட் அமைக்கும் பணியில் செந்தில்குமார் ஈடுபட்டிருந்தார்.

Advertisement

அந்த பகுதியில் மின்சாரம் கிடைக்காமல் போக அங்குள்ள ஜெனரேட்டரை அவர் இயக்கினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீசார் அவரது உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement