For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிக்ஜாம் புயல் எதிரொலி - பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு!

11:15 AM Dec 04, 2023 IST | Web Editor
மிக்ஜாம் புயல் எதிரொலி   பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
Advertisement

மிக்ஜாம் புயல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்  வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டது. மணிக்கு பத்து  கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இப்புயல் நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்க உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், விஐடி சென்னை, தரமணி, வளசரவாக்கம், பெருங்குடி, முகலிவாக்கம்,அம்பத்தூர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. 

இது குறித்து முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் கூறியதாவது;

2015ம் ஆண்டிற்கு அடுத்தபடியாக 2021ஆம் ஆண்டில் சென்னையில் அதிக மழைப்பொழிவு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் அதிக மழைப்பொழிவை சென்னை சந்தித்து வருகிறது.

மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து,  அதனை தொடர்ந்து மழை பாதித்துள்ள இடங்களில் அமைச்சர்கள் பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்.

Tags :
Advertisement