For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

MI | மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகும் ரோகித் சர்மா?

07:32 AM Sep 12, 2024 IST | Web Editor
mi   மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகும் ரோகித் சர்மா
Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு ரோகித் சர்மா வெளியேறுவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தெரிவித்தது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளது. அதில் முக்கிய அணியாக கருதப்படுவது மும்பை இந்தியன்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 கோப்பைகளை வென்றிருந்தாலும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் தோல்வியடையாமல் கோப்பையை வென்றுள்ளது.

மேலும் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தலைமையில் தான் அந்த 5 கோப்பைகளும் வென்றெடுக்கப்பட்டன. இருந்தாலும், அணியின் எதிர்கால நலனுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காகவோ, கடந்த ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போதே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ரோகித் சர்மா போன்ற ஒரு வீரரை, திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, சாதாரண வீரராக விளையாட வைத்தது, அந்த அணியை மும்பை ரசிகர்களே வெறுக்கும் நிலைக்கும் தள்ளியது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தையே பிடித்தது.

இந்நிலையில், ரோகித் சர்மா வரும் ஐபிஎல் தொடரில் வேறு அணிக்கு சென்றுவிடுவார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்து வந்தார். அப்போது ரோகித் சர்மா குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ரோகித் சர்மா வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடமாட்டார் என தான் கருதுவதாக தெரிவித்தார். மேலும், அவர் ட்ரேட் மூலம் வேறு அணிக்கு செல்ல அதிக வாய்ப்பிருப்பதாகவும், அப்படி இல்லாதபட்சத்தில் அவர் ஏலத்திற்கு வருவார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,  ஒரு வீரரை அந்த அணி தக்கவைக்கிறது என்றால், நிச்சயம் அவர் 3 ஆண்டுகளுக்கு அதே அணியில் விளையாடுவார் என உங்களால் கூறமுடியாது. நீங்கள் எம்.எஸ்.தோனியாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். சென்னை அணிக்கும், எம்.எஸ்.தோனிக்கும் உள்ள உறவு வேறானது. அதுவே மும்பை இந்தியன்ஸ்க்கும் ரோகித் சர்மாவிற்கும் உள்ள உறவு வேறானது. நிச்சயம் மும்பை அணி ரோகித் சர்மாவை வெளியேற்றும் அல்லது அவர் மும்பை அணியை விட்டு வெளியேறுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். மேலும் சூர்ய குமார் யாதவ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சூர்ய குமார் யாதவ் மும்பை அணியை விட்டு வெளியேற மாட்டார் என தெரிவித்தார்.

Tags :
Advertisement