Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுவது பிரச்னையல்ல...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

10:50 AM Dec 16, 2023 IST | Jeni
Advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பது பிரச்னையில்லை என்றும்,  தமிழ்நாட்டின் நன்மைக்காக ஆளுநர் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.  அதில் ‘முதலமைச்சராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி,  நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆளுநர் உங்களை அழைத்திருக்கிறார்.  அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன்.  பேசி இருக்கிறேன்.  அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத் தான் பழகினார்,  பேசினார்.  எனவே,  நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்னை.

இதையும் படியுங்கள் : தைவான் இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 300 கற்கள் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்..!

ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.  தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும்,  வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து,  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல்,  ‘மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.

இக் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தான்.  இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்னைகள் தான் தலைதூக்கிக் காணப்படும்.  அவை தான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வென்றிருந்தாலும்,  காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர் தான்.  சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள் தான் பாஜக அதிகம் பெற்றுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : கலை வடிவமைப்பின் ‘தளபதி’ தோட்டா தரணி....!

பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல்,  ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பாஜக பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை.  நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும்.  அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம்.  மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Tags :
CMOTamilNaduGovernormeetMKStalinRNRaviTNGovt
Advertisement
Next Article