Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குளியலறையில் ரகசிய கேமரா - மருத்துவ மாணவர் கைது!

11:11 AM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை ராயபுரத்தில் பெண்ணின் வீட்டு குளியலறையில் ஸ்பை பெண் (Spy Pen) என்ற ரகசிய கேமராவை வைத்த முதுநிலை பல் மருத்துவ மாணவர் இப்ராஹிம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisement

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம்.  இவர் முதுநிலை  பல் மருத்துவம் படித்து வருகிறார்.  அவரது வீட்டில் 30 வயது பெண் ஒருவர் தனது கணவர் குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.  அந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்து,  குளியலறை அருகே ஸ்பை பெண் (Spy Pen) என்ற ரகசிய கேமராவை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில்,  நேற்று அந்த பெண் சந்தேகம் அடைந்து,  குளியலறை அருகே இருந்த பேனாவை எடுத்து தனது கணவரிடம் காண்பித்துள்ளார்.  அப்போது அதில் கேமரா இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.  இது தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மருத்துவ மாணவர் இப்ராஹிமை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனே இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது கணவருடன்,  ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரின் பேரில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  பின்னர் முதுநிலை மருத்துவ மாணவர் இப்ராஹிமை போலீசார் கைது செய்தனர்.

Tags :
#royapuramArrestChennaiCrimeinvestigationPoliceSecret cameraSpy Pen
Advertisement
Next Article