For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம் ; அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு" - இயக்குநர் வெற்றி மாறன்

08:12 AM Jul 07, 2024 IST | Web Editor
 ஆம்ஸ்ட்ராங்கால் இன்ஸ்பையர் ஆனவர்கள் ஏராளம்   அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரிழப்பு    இயக்குநர் வெற்றி மாறன்
Advertisement

ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

”ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது படுகொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரால் இன்ஸ்பையர் ஆகியும் அவரை ரோல் மாடலாக வைத்து படித்து முன்னேறியவர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.  இந்த படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என வெற்றிமாறன் தெரிவித்தார்.

Tags :
Advertisement