For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விலை வீழ்ச்சியால் வீணாகும் மாம்பழங்கள்... விவசாயிகள் வேதனை!

மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவை வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
12:06 PM Jun 17, 2025 IST | Web Editor
மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவை வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விலை வீழ்ச்சியால் வீணாகும் மாம்பழங்கள்    விவசாயிகள் வேதனை
Advertisement

மாம்பழம் விளைச்சல் அமோகமாக இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள், மாம்பழங்களை சாலையோரம் கொட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாம்பழ விவசாயிகளின் வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

Advertisement

திருச்சி

மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆண்டுக்காண்டு கேள்வி குறியாகி வருகின்றது. விளைச்சலுக்காக செய்த செலவு பணம் கூட சில ஆண்டுகள் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இடுபொருட்களின் விலை உயர்வாகவும், மாம்பழங்களின் விலை குறைவாகவும் உள்ளது. இதனால், தினமும் அழுகிய நிலயில் மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.  இதன்காரணமாக குளிர் பதன பாதுகாப்பு குடோன்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருச்சியில் மாம்பழ ஜூஸ் கம்பெனியை அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் விளைச்சல் அதிகரித்தது. மாம்பழ ரகங்களான பெங்களூரா 3 ரூபாய்க்கும், செந்தூரா 8 ரூபாய்க்கும் மீதி இத ரகங்கள் விலை குறைந்த நிலையில் மாம்பழ வியாபாரிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் மாங்காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிடுகின்றனர். இனி வரும் காலங்களில் மாம்பழங்களின் விலை இதேபோல் இருந்தால் மாமரங்களை வெட்டி விட்டு நிலத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலை நீடிக்கப்படும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசே விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இந்தாண்டு மாம்பழ விளைச்சலும் இல்லை விலையும் இல்லை என வவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வியாபாரிகள் மாம்பழத்தை கொள்முதல் செய்ய வராததால் பழங்கள் மாமரத்திலேயே பழுத்து அழுகி விழுந்து வீணாகுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் மங்காய் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை
சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ராஜபாளையம், சேத்தூர், மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில்
தற்போது ஆயிரக்கணக்கான இடத்தில் மாங்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் மாங்காய்களை விற்பனை செய்து வருகின்றனர். பத்து வருடத்திற்கு முன்பே 30 ரூபாய்க்கு போன விலைபோன மாங்காய் தற்பொழுது வெறும் கிலோ 15 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்யப்படுவதாக  விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் அந்த 20 ஆயிரம் கூட கிடைப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளனர். மாம்பழங்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மாங்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் மாங்காய் ஜூஸ் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என அரசுக்கு மாங்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாம்பழ ஏற்றுமதியாளர் திருப்பதி ராஜன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், "நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாம்பழங்கள் அதிக அளவில் விளைச்சல் ஆகும். இக்காலகட்டத்தில் மாம்பழ விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மாம்பழம் அதிக விளைச்சல் கிடைக்ககூடிய காலகட்டத்தில் மாம்பழத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். மாம்பழத்தை கூழாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். வெளிநாடுகளில் மாம்பழ கூலிற்கு அதிக அளவிலான தேவைகள் உள்ளன. வெளிநாடுகளில் மாம்பழ கூலை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

தென் மாவட்டங்களில் மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். மாம்பழங்கள் அதிக விளைச்சல் ஏற்படும் காலகட்டத்தில் விவசாயிகள் மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனத்திடம் விற்பனை செய்யலாம். மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்பு கூட்டும் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாம்பழங்களில் உள்ள ஊட்டச்சத்து குறித்து மக்களிடம் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதுதொடர்பான முழுமையாக தகவலை காண...

Tags :
Advertisement