டிஓடி, கடந்த 2022 மார்ச் மாதத்தில் இந்த முன்மொழிவை வழங்கிய பிறகு, டிராய் அதே ஆண்டு நவம்பரில் தொடங்கி, கடந்த மார்ச் வரை ஆலோசனையில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து தற்போது இறுதி பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. டிராயின் இறுதி பரிந்துரையானது அழைப்பாளர் விவரங்களை தொலை தொடர்பு நிறுவனங்களே காண்பிக்கும் சேவை, நடைமுறைக்கு வரும் நிலையை மேலும் ஒரு படி முன்னகர்த்தியுள்ளது.
இந்த அம்சம் நடைமுறைக்கு வந்தால், தற்போது அச்சேவையை விளம்பரங்கள் மற்றும் கட்டண ஆதரவுடன் வழங்கி வரும் 'ட்ரூ காலர்' போன்ற அடையாளத்தை காண்பிக்கும் செயலிகளுக்கு பெருத்த அடி விழும் என தொலைத் தொடர்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இயல்பான சேவையிலிருந்து அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் வகையில் செயல்பாடுகளை மேம்படுத்த ட்ரூ காலர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.