மதுரை மேயரின் கணவர் கைது - பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ...நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடிக்கும் மேலான வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்திருப்பது
திராவிட அரசின் ஊழல் முகத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
நமது பாஜக முன்னெடுத்த மாபெரும் கண்டன போராட்டம் மற்றும் தொடர் அழுத்தத்தின் விளைவாக இந்த கைது சாத்தியமாகியுள்ள நிலையில் இது நமது தாமரை சொந்தங்களின் அரும்முயற்சிக்கு கிடைத்த வெற்றியே. ஆனால் மக்கள் நலனுக்கான நமது அறப்பணி இதோடு முடியப்போவதில்லை. மதுரை மாநகராட்சியின் வரி முறைகேட்டின் பின்னுள்ள அனைத்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டு, ஊழலில் ஊறித்திளைக்கும் திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழக பாஜக ஓயாது! இது உறுதி! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.