Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு விவரம் வெளியீடு! எத்தனை காளைகள், காளையர்கள் களம் காண்கின்றனர்?

09:46 PM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எத்தனை காளைகள், வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

Advertisement

ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன. கடந்த வாரம் இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயாரானது.

இந்த அரங்கத்தை 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற இருக்கின்றன. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முந்தினம் (19.01.2024) தொடங்கியிருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவு நெற்று நிறைவு பெற்றது.

இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9312 காளைகளின் உரிமையாளர்களும், 3669 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

Tags :
அலங்காநல்லூர்மதுரைஜல்லிக்கட்டுalanganallurCMO TamilNaduDMKJallikattujallikattu 2024MaduraiMK Stalinnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article