நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
07:18 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement
மார்ச் 19ம் தேதி நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
தமிழில் ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதுதொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்திலும் சீமான் மீது புகாரளிக்கப்பட்டது. ஆனால் முடிந்து போன வழக்கை மீண்டும் விசாரிக்கப்படுவதாக சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், மார்ச் 19ல் நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.