For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்தியப்பிரதேசம் : முதியவரின் மலக்குடலில் இருந்து 16 இன்ச் சுரக்காயை அகற்றிய மருத்துவர்கள்!

07:06 PM Jul 24, 2024 IST | Web Editor
மத்தியப்பிரதேசம்   முதியவரின் மலக்குடலில் இருந்து 16 இன்ச் சுரக்காயை அகற்றிய மருத்துவர்கள்
Advertisement

மத்தியப் பிரதேசத்தில் 60 வயது முதியவரின் மலக்குடலில் இருந்து 1 அடி நீளமுள்ள சுரக்காயை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாகவே பல வித்தியாசமான பொருட்கள் அறுவை சிகிச்சைகள் மூலம் உடலிலிருந்து அகற்றப்படுவதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இதுபோன்று கேள்விப்படும் அறுவை சிகிச்சைகள் நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் தற்போதும் இதுபோன்ற வினோத நிகழ்வு ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் மிகுந்த வயிற்றுவலியால் மருத்துவரை சென்று பார்த்துள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரின் மலக்குடலில் ஒரு அடி நீளமுள்ள சுரக்காய் இருந்ததை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த சுரக்காய் எவ்வாறு வந்தது என்பது குறித்து முதியவர் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

உடனே அந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2 மணிநேர சிகிச்சைக்கு பின்பு அவரது மலக்குடலில் இருந்து சுரக்காய் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement