“சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்-ன் புகழை நாளும் போற்றுவோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியாவின் 7வது பிரதமரும் சமூக நீதிக் காவலருமான மறைந்த வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Let us remember and revere Thiru. #VPSingh, the sentinel of #SocialJustice, who dared to raise its radiant light against the entrenched darkness of caste tyranny across Indian soil. His legacy is our mandate. Remember this, young minds: to twist the history of resistance is to… pic.twitter.com/fPNpWxNiOC
— M.K.Stalin (@mkstalin) June 25, 2025
இது தொடர்பான அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்-ன் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.