For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘லால் சலாம்' இசைவெளியீட்டு விழா!

10:05 PM Jan 26, 2024 IST | Web Editor
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘லால் சலாம்  இசைவெளியீட்டு விழா
Advertisement

சென்னையில் கோலாகலமாக நடைபெற்றும் வரும் லால்சலாம் திரைப்பட இசைவெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கம் போல் குட்டிக்கதை சொல்வாரா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு.

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று ( 26.01.2024) நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மூத்த திரைப்பட இயக்குனர் ரவிக்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் ரஜினி தனது பாணியில் குட்டி ஸ்டோரியை இந்த இசை வெளியீட்டு விழாவில் சொல்லுவாரா? இல்லையா? என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Tags :
Advertisement