For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி - எல்.முருகன் துவக்கி வைத்தார்!

புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
11:25 AM Jun 09, 2025 IST | Web Editor
புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ விதான் செயலி   எல் முருகன் துவக்கி வைத்தார்
Advertisement

நாட்டில் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டபேரவையின் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்க நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரவை முடிவு செய்தது. இது ஒரே நாடு ஒரே செயலி என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி அனைத்து மாநில சட்டபேரவைகளும் காகிதமில்ல நடவடிக்கைக்கு மாறும் வகையில் ரூ.673. 94 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டு இந்த பணிகள் நடந்து வருகிறது.

Advertisement

அதன்படி, புதுச்சேரியில் உள்ள சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தேசிய இ-விதான் செயலியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் துவங்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.8.16 கோடி செலவில் புதுச்சேரி சட்டபேரவை மின்னனு உட்கட்டமைப்பு மேம்படுத்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளில் டேப்லட் டிவைஸ் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு இதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற கூட்டம் முழுமையாக காகிதமில்லா சட்டசபையாக செயல்பட உள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement