For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு!

09:03 PM Jun 12, 2024 IST | Web Editor
குவைத் தீவிபத்து – அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்கள் அறிவிப்பு
Advertisement

குவைத் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.

Advertisement

குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது.  இதில் குறைந்தது தமிழர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.

குவைத் நாட்டு நேரப்படி  இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஆறு மாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் திடீரென தீப்பற்றியது.  இதனைத் தொடர்ந்து  தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.  இந்தக் கட்டடத்தில் சுமார் 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 50 பேர் காயமுற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குவைத் கட்டடத்தில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.

இது குறித்து அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : குவைத் தீவிபத்து – சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்கு - +91 1800309 3793
வெளிநாடு - +91 80 6900 9900, +91 80 6900 9901

Tags :
Advertisement