Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை - #Kozhikode -ல் அதிர்ச்சி!

09:36 PM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் ஏடிஎம்-க்கு பணம் கொண்டு சென்றவர் மீது மிளகாய் பொடி வீசி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமீபகாலமாக ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம்,கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோழிக்கோடு அருகே பீடிகா என்ற பகுதியில் காரில் ஒரு பெண் உட்பட இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் கார் ஓட்டுநரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி உள்ளனர். பின்னர் காரில் இருந்த ரூ. 25 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : “ #KLRahul -க்கு கடைசி டெஸ்ட் போட்டியா?” - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆனால், சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர் உள்பட 2 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், பர்தா அணிந்திருந்த பெண் கும்பல், காரில் லிப்ட் கேட்டு ஏறியதாகவும், தன் மீது மிளகாய் பொடியை தூவி, ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ATMIncidentIndiaKeralaKozhikodeMoneyNews7Tamilnews7TamilUpdatesRobbery
Advertisement
Next Article