For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொட்டித் தீர்த்த கனமழை - கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ.மீ மழை பதிவு!

08:50 AM Dec 05, 2023 IST | Web Editor
கொட்டித் தீர்த்த கனமழை    கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ மீ மழை பதிவு
Advertisement

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

வங்க கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்  வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3)  புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் சென்னைக்கு 210 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள் : மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும்12 ரயில்கள் ரத்து!

இதனை தொடர்ந்து,  மிக்ஜாம் புயல் மணிக்கு பத்து  கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நெல்லூர்- மசூலிப்பட்டிணம் இடையே கரையை கடக்கும் நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்தது. தற்போது 210 கிமீ தொலைவில் விலகிச் சென்றதால் தற்போது சென்னையில் மழை குறைந்துள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. 

அதன்படி, சென்னையில் கடந்த 45 மணி நேரத்தில் 47 செ.மீ மழைப் பதிவாகி உள்ளதாக  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, முகலிவாக்கம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. 

அதனை தொடர்ந்து, காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் நுங்கம்பாக்கத்தில் 24 செ.மீ மழையும்,  மீனம்பாக்கத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags :
Advertisement