KKRVsRR - 152 ரன்கள் இலக்கு...பந்து வீச்சில் கொல்கத்தா அணி அசத்தல்!
18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(மார்ச்26) அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அசாம் மாநிலம் பர்சபரா மைதானத்தில் இப்போட்டி நடக்கவுள்ளது.
இந்த நிலையில் இபோட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதில் கொல்கத்தா அணி சார்பில் அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்) , வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயின் அலி, ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
அதே போல் ராஜஸ்தான் அணியில், ரியான் பராக் (கேப்டன்), யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதீஸ் ராணா, துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், ஹசரங்கா, ஜோஃரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
முதல் இன்னிஸில் ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்திருந்தார். இவருக்கடுத்தபடியாக ஜெய்ஸ்வால் 29 ரன்களும் ரியான் பராக் 25 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. கொல்கத்தா அணியில் மொயின் அலி, வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 152 என்ற இலக்கை கொல்கத்தா அணி சேஸிங் செய்து வருகிறது.