For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கரூர் துயரம் - கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
01:31 PM Sep 29, 2025 IST | Web Editor
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் துயரம்   கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு
Advertisement

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.  இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வின் போது எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
Advertisement