For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை விட்ட சிஐஎஸ்எஃப் காவலர் பணியிட மாற்றம்!

07:22 PM Jul 03, 2024 IST | Web Editor
கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை விட்ட சிஐஎஸ்எஃப் காவலர் பணியிட மாற்றம்
Advertisement

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை விட்ட சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பாலிவுட் நடிகையும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியின் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் கடந்த மாதம் டெல்லி செல்வதற்காக, சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரி குல்விந்தர் கவுருக்கும் வாக்குவாதம் எழுந்த நிலையில் அந்த அதிகாரி கங்கனாவை கன்னத்தில் அறைந்தார்.

இதனையடுத்து இதுகுறித்து டெல்லியில் சிஐஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரல் நினா சிங்கிடம் கங்கனா புகார் அளித்தார். விசாரணையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக தெரியவந்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் மறுபக்கம் குல்விந்தர் கவுரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாரட்டுகள் குவிந்தன. இந்நிலையில், தற்போது குல்விந்தர் கவுர் சண்டீகர் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement