For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங். மாவட்டத் தலைவரின் உடல் - உடற்கூராய்வு நிறைவு!

06:10 PM May 04, 2024 IST | Web Editor
பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காங்  மாவட்டத் தலைவரின் உடல்   உடற்கூராய்வு நிறைவு
Advertisement

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது.

Advertisement

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனிடையே ஜெயக்குமாரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜெயகுமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடல் பாதி எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஜெயகுமார் தனசிங் கடிதம் எழுதியிருந்தார். இப்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்துள்ளது. மேலும் நாளை (மே 5) காலை திசையன்விளையில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement