For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரம் - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

05:08 PM Jun 25, 2024 IST | Web Editor
கள்ளக்குறிச்சி விவகாரம்   தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 59 போ் உயிாிழந்தனா். சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பாதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி.  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினா்.

மேலும் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் விற்றதாக சின்னதுறை, ஜோசப்ராஜ், ஷாகுல் அமீது, கண்ணன், ராமர் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில் புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஸ், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து மெத்தானல் வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், பண்ருட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரது கடையின் ஜிஎஸ்டி பில் மூலம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு பணம் அனுப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து மாதேஷ் மற்றும் மெத்தனால் அனுப்பி வைத்த சென்னை மதுரவாயலை சோ்ந்த சிவக்குமாா், சக்திவேல் ஆகியோரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், சாராய விற்பனையில் தொடர்புடைய கதிரவன், தெய்வீகன், அய்யாசாமி, அரிமுத்து ஆகிய 4 பேரை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து தனித்தனியே விசாரணை நடத்தினர். சென்னை மாதவரம், பூங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆலைகளிலிருந்து மெத்தனால் வரவழைக்கப்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுவது தெரியவந்தது.

அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 5 தனியார் ஆலைகளின் உரிமையாளர்கள் உட்பட 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சடையன், சிவகுமார், பன்சிலால், கௌதம், ரவி, செந்தில், ஏழுமலை, உள்ளிட்ட 7 பேரை  கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement