For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைமாமணி விருது - தமிழ் நாடு அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி..!

கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
08:10 PM Sep 26, 2025 IST | Web Editor
கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
கலைமாமணி விருது   தமிழ் நாடு அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி
Advertisement

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி அவரிகளுக்கு கலைமாமணி விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மற்றும் இயல் இசை நாடக மன்றத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்வில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முக்கியமாக தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த கௌரவம் உங்களுக்கெல்லாம் சொந்தமானது”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement