For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உமர் காலித்தின் ஜாமீன் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | தனி அமர்வுக்கு செல்லும் வழக்கு!

10:36 AM Jul 22, 2024 IST | Web Editor
உமர் காலித்தின் ஜாமீன் விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி   தனி அமர்வுக்கு செல்லும் வழக்கு
Advertisement

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிஅமித் சர்மா,  JNU மாணவர் உமர் காலித் ஜாமீன் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளார். 

Advertisement

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித், டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பிப்ரவரி 2020 இல் நடந்த கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உமர் காலித்தின் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அதாவது திங்கட்கிழமை விசாரணைக்கு வரவிருந்தது, ஆனால் நீதிபதி அமித் சர்மா தற்போது விசாரணையில் இருந்து விலகியதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உமர் காலித்தின் ஜாமீன் மனு மீதான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீபா எம் சிங் மற்றும் நீதிபதி அமித் சர்மா நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது, இது இன்று அதாவது திங்கட்கிழமை விசாரணைக்கு வரவிருந்தது, ஆனால் இப்போது நீதிபதி அமித் ஷர்மா வழக்கில் இருந்து விலகியுள்ளார். நீதிபதி அமித் சர்மா விசாரணையில் இருந்து விலகியதை அடுத்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தனி பெஞ்ச் ஜூலை 24 அன்று உமர் காலித்தின் ஜாமீன் மனுவை விசாரிக்கும்.

இதற்கு முன்பும், டெல்லி கலவர வழக்கில் ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர் மற்றும் பிற குற்றவாளிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரிப்பதில் இருந்து நீதிபதி அமித் சர்மா விலகினார். அதன் பிறகு தற்போது உமர் காலித்தின் ஜாமீன் மனு வழக்கில் இருந்து அவர் ஒதுங்கியிருக்கிறார்.

Advertisement