Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது” - ஆளுநர் ஆர்.என். ரவி!

முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
09:02 PM Feb 13, 2025 IST | Web Editor
முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உச்சநீதிமன்றம் முன்பாக உள்ள அதன் விசாரணைக்கு புறம்பான ஒரு விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

நமது நாட்டின் நான்காவது தூண், தனக்குப் பிடிக்காதவர்கள் மீது வண்ணமய விமர்சனங்களைச் சுமத்துவது உள்ளிட்ட சிறப்புரிமைகளைப் பெற்றிருப்பதற்கு காரணமான நமது துடிப்பான அரசியலமைப்பு ஜனநாயகம் மற்றும் வலுவான கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு நன்றிகள். இருப்பினும், அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தனது அரசியலமைப்புப் பொறுப்பை  மதிக்காமல் உள்ளார்.

அதோடு பாதி உண்மைகள் மற்றும் பாரபட்சம் நிறைந்த ஒரு நாளிதழின் கருத்துக்களை தனது விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஊன்றுகோலாக, தனது முழுமையான நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், தனது அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தியிருப்பது பரிதாபத்துக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் அவர் நினைப்பதை விட மிகவும் புத்திசாலிகள்”

இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Tags :
DMKGovernorMK StalinRNRavi
Advertisement
Next Article