For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Lebanon மீது இஸ்ரேல் தாக்குதல்… ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழப்பு!

11:32 AM Sep 22, 2024 IST | Web Editor
 lebanon மீது இஸ்ரேல் தாக்குதல்… ஹிஸ்புல்லா முக்கிய தளபதி உயிரிழப்பு
Advertisement

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்தார்.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும்,  40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. அந்த அமைப்பு இஸ்ரேல் மீது குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என இஸ்ரேலுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் கரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் நேற்று முன்தினம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37க உயா்ந்துள்ளது. உயிரிழந்தவா்களில் 7 பெண்கள், 3 சிறுவா்கள் அடங்குவா். தவிர, இந்தத் தாக்குதலில் 68 போ் காயமடைந்தனா். அவா்களில் 15 பேருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் தேடுதல் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல் உயிரிழந்ததாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், அதே சிறப்புப் படையைச் சோ்ந்த அகமது வாபியும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement