For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்’ என வைரலாகும் காணொலி உண்மையா?

புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் என வைரலாகும் காணொலி குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
06:50 AM Feb 25, 2025 IST | Web Editor
‘புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்’ என வைரலாகும் காணொலி உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘Factly

Advertisement

பிப்ரவரி 15, 2025 அன்று இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜுக்குச் செல்லும் பயணிகளின் திடீர் அதிகரிப்பு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ (இங்கேஇங்கே, மற்றும் இங்கே) நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காட்சிகளைக் காட்டுவதாகவும், அன்று 500 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

வைரல் வீடியோவின் கீஃப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அதே வீடியோ (காப்பகப் பதிவு) இடம்பெற்றுள்ள 28 ஜனவரி 2025 தேதியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு கிடைத்தது. அதன் தலைப்பு, “எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள், கூட்டத்தைத் தவிர்க்கவும்” 🚫 #Ayodhya, #RamJanmabhoomi, #RamMandirAyodhya, #UP, #UPTourism, #Instagram, #Reels, #Mahakumbh2025, #Prayagraj, #TheMySangam, மற்றும் #TriveniSangam போன்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனவே, வைரல் வீடியோவிற்கும் 15 பிப்ரவரி 2025 அன்று புது டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த கூட்ட நெரிசலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

வைரல் வீடியோவில் "வழக்கறிஞர் அறை" என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய கட்டிடம் இருந்தது கவனம் பெற்றது. அந்த பதிவிலிருந்து ஒரு துப்பைப் பெற்று, அயோத்தி கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு வழக்கறிஞர் அறையைத் தேடி, அயோத்தி தாம் சாலையில் உள்ள ஸ்ரீ ராம் மருத்துவமனைக்கு அருகிலுள்ள இடம்  கண்டறியப்பட்டது. ஒப்பீட்டை கீழே காணலாம்.

தி குயின்ட்" பத்திரிகையாளர் பியூஷ் ராயின் 27 ஜனவரி 2025 தேதியிட்ட ஒரு ட்விட்டர் பதிவும் (காப்பகம்) கிடைத்தது. அதில் அயோத்தியிலிருந்து மகா கும்பமேளாவிற்கு ராம் லல்லாவைக் காண வந்த பார்வையாளர்கள் கூட்டம் வீடியோ இடம்பெற்றிருந்தது.

வைரலான வீடியோவிலும் பியூஷின் வீடியோவிலும் காணப்படும் "மும்பை தோசை கிங்" கடைப் பலகையும் கவனிக்கப்பட்டது. ஒப்பீட்டை கீழே காணலாம்.

பியூஷின் காணொளி, கடை ஸ்ரீ ராம் மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது, இது அயோத்தியில் உள்ள அயோத்தி தாம் சாலையில் உள்ள ஸ்ரீ ராம் மருத்துவமனைக்கு அருகில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியது. கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூவை பயன்படுத்தி இந்த இருப்பிடத்தைச் சரிபார்க்கப்பட்டது.

சுருக்கமாக, அயோத்தியிலிருந்து வந்த ஒரு பெரிய கூட்டத்தின் தொடர்பில்லாத காணொளி, பிப்ரவரி 2025 இல் புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காட்சிகளாகப் பகிரப்படுகிறது.

Note : This story was originally published by ‘Factly’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement