For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?

காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
11:24 AM Feb 11, 2025 IST | Web Editor
பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘Vishvas News

Advertisement

சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரி, சைனா டோர் பற்றி மற்றொரு நபருடன் தொலைபேசியில் பேசும்படியான காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடக பயனர்கள் இந்த காணொளியை உண்மையானது என்று கருதி பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்த விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் உண்மையானது என்று நினைத்து வைரலாக்கும் இந்த காணொளி உண்மையில் எழுதப்பட்டு எடுக்கப்பட்ட காணொளி. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியில் காணப்படும் காவல்துறை அதிகாரி கலைஞர் ஜவீந்தர் சிங் பிரார் ஆவார்.

வைரல் பதிவு:

பஞ்சாப் ஹைலைட்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் பிப்ரவரி 4 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்து, "சட்டமன்ற உறுப்பினருடன் எஸ்ஹெச்ஓ (காவல் நிலைய அதிகாரி) கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார், படங்களைப் பாருங்கள். போலீசார் தங்கள் வேலையைச் சரியாகச் செய்திருந்தால், இந்த மக்கள் அவர்களை விடமாட்டார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கான காப்பக இணைப்பை இங்கே காணலாம்.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான காணொளியை விசாரிக்க, இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை கூகுளில் தேடியதில், டைனிக்சவேராவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் காணொளி தொடர்பான செய்திகள் கிடைத்தன. பிப்ரவரி 3, 2025 அன்று பதிவேற்றப்பட்ட காணொளியில், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நபரின் பெயர் ஜஸ்விந்தர் சிங் பிரார் என்றும் அவர் ஒரு நடிகர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜஸ்விந்தர் பிரார் கூறியதை காணொளியில் கேட்கலாம்.

டெய்லி போஸ்ட் பஞ்சாபியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலான காணொளி தொடர்பான ஒரு பதிவு கிடைத்தது. பிப்ரவரி 4, 2025 அன்று பகிரப்பட்ட பதிவில், ஜஸ்விந்தர் சிங் பிரார் இந்த காணொளியை சமூக விழிப்புணர்வுக்காக உருவாக்கியதாகக் கூறுவதைக் கேட்கலாம்.

விசாரணையில் மேலும், ஜஸ்விந்தர் சிங் பிரார் என்பவரைத் தேடியதில், பிப்ரவரி 2, 2025 அன்று ஜஸ்விந்தர் சிங்கின் பேஸ்புக் கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ கிடைத்தது. அந்த வீடியோவில், காவல்துறையினர் ஆற்றிய பங்கிற்காக அவர்களுக்கு அளித்த பாராட்டுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறுவதைக் கேட்கலாம்.

முழு காணொளியும் ருட்பா டிவி என்று பெயரிடப்பட்ட YouTube சேனலில் கிடைத்தது. 2 பிப்ரவரி 2025 அன்று பதிவேற்றப்பட்ட இந்த காணொளியில் அனைத்து கலைஞர்களையும் 32:02 மணி முதல் ஒன்றாகக் காணலாம், மேலும் இந்த காணொளி சமூக விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த காணொளி குறித்து பஞ்சாபி ஜாக்ரனின் மூத்த பணியாளர் நிருபர் குருதேஜ் சித்துவை தொடர்பு கொண்டு கேட்டபோது, காணொளியில் காவல்துறை அதிகாரி ஒரு கலைஞர் என்றும், இந்த காணொளி ஒரு சமூக செய்தியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, காணொளியைப் பகிர்ந்த பக்கத்தை ஸ்கேன் செய்ததில், இந்தப் பக்கத்தை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் என்பது தெரியவந்தது.

முடிவு:

காவல்துறை அதிகாரி மற்றும் எம்எல்ஏவின் வைரலான காணொளி எழுதப்பட்டு உருவாக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது. இந்த காணொளி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது, சிலர் இதை உண்மையானது என்று கருதி தவறான கூற்றுகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Note : This story was originally published by ‘Vishvas News and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement