நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ் ஜோடியாக மகா கும்பமேளாவில் பங்கேற்றது உண்மையா?
This News Fact Checked by ' PTI '
பாலிவுட் திரைப்பட நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் வெள்ளை நிற உடையில் உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பமேளாவில் பங்கேற்றதாக சமூக வலைத்தளப் பயனர்கள் புகைப்படங்களை பகிர்ந்தனர்
இது குறித்த PTI உண்மை சரிபார்ப்பு குழு மேற்கொண்ட விசாரணையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த இந்த புகைப்படம் போலியானது என்றும் அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உண்மையானதுபோல் தவறாக பகிரப்பட்டது என்றும் கண்டறிந்துள்ளனர்.
உரிமைகோரல்:
பிப்ரவரி 17 அன்று, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவைப் பார்வையிடுவதைக் காட்டும் ஒரு படத்தை பேஸ்புக் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், “ க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பிரீத்தி ஜிந்தாவின் அழகான கும்பமேளா புகைப்படம்” என்ற தலைப்பில் அந்த பயனர் புகைப்படத்தை பகிந்திருந்தார்.
அந்த பதிவுக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு ஒரு ஸ்கிரீன்ஷாட்டுடன்:
உண்மை சரிபார்ப்பு:
கூகுள் லென்ஸ் மூலம் வைரலான படத்தை PTI உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டது. மேலும் பல பயனர்கள் ஒரே மாதிரியான கூற்றுகளுடன் ஒரே பதிவைப் பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்தது. அந்த பதிவுகளை இங்கே மற்றும் இங்கே காணலாம். மேலும் இதன் காப்பகப்படுத்தப்பட்ட பதிவுகளை இங்கேயும், இங்கேயும் காணலாம்.
PTI - யின் உண்மை சரிபார்ப்பு குழு இதை கவனமாக பகுப்பாய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட புகைப்படத்தில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதற்கான பல முரண்களை கண்டறிந்தது. உதாரணத்திற்கு அதில் பிரீத்தி ஜிந்தாவுக்கு ஆறு விரல்கள் இருப்பது காட்டப்பட்டது. மேலும் படத்தின் பின்னணி மிகவும் மங்கலாகத் தெரிந்தது.
முரண்பாடுகள் கண்டறிப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்:
அந்த புகைப்படத்தை உண்மை சரிபார்ப்பு குழு, ஹைவ் மாடரேஷன் (ஒரு AI கண்டறிதல் கருவி) மூலம் இயக்கியதில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் உண்மையான இருப்பைக் கணித்தது. அதன் முடிவு ஸ்கிரீன்ஷாட்டாக கீழே உள்ளது.
விசாரணையின் அடுத்தப்பகுதியாக PTI-யின் உண்மை சரிபார்ப்பு குழு, புகைப்படத்தில் உள்ள பிரபலங்களில் யாராவது பிரயாக்ராஜில் நடைபெற்ற 2025 மகா கும்பமேளாவிற்கு தனித்தனியாகச் சென்றார்களா என்பதைக் கண்டறிய அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தது. அதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் தரப்பில் அத்தகைய பதிவுகள் அல்லது தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும் பிரீத்தி ஜிந்தா சமீபத்தில் மகா கும்பமேளாஅவில் பங்கேற்க பிரயாக்ராஜுக்கு மூன்றாவது முறையாக வருகை தந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், அவர் தனது நண்பர்களுடன் மகா கும்பமேளாவிற்குச் சென்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் , க்ளென் மேக்ஸ்வெல் அவருடன் பயணத்தில் சென்றதாக எந்த தகவலும் அதில் இல்லை.
அந்த பதிவின் இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்:
இதையடுத்து இருவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக வெளியான புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பதை PTI-யின் உண்மை சரிபார்ப்பு குழு உறுதி செய்தது.
முடிவு:
பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் பிரயாக்ராஜில் நடந்த 2025 மகா கும்பமேளாவை பார்வையிட்டதாகக் கூறும் ஒரு புகைப்படத்தை பல சமூக ஊடக பயனர்கள் சமீபத்தில் பகிர்ந்து கொண்டனர். இது AI-யால் உருவாக்கப்பட்டு தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாக PTI-யின் உண்மை சரிபார்ப்பு குழு கண்டறிந்துள்ளது.
Note : This story was originally published by ' PTI ' and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.