ஐபிஎல் | 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படும் சமயத்தில் மழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதையடுத்து சுமார் 2 மணிநேரம் தாமதாக டாஸ் போடப்பட்டது. இந்த ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னிலும், பிலிப் சால்ட் 4 ரன்களிலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். கேப்டன் ரஜத் படிதார் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 2 ரன்களிலும், குருணால் பாண்டியா 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இவர்களை அடுத்து இறங்கிய டிம் டிவிட் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தார்.
மறுமுனையில் மனோஜ் பன்டேஜ் 1 ரன்னிலும், பவனேஷ்வர் குமார் 8 ரன்களிலும், யாஷ் தயாள் ரன் எதுவும் அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் நிலைத்து 50 ரன்களுடன் இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணியில் சாஹல், மார்க்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், சேவியர் பார்லெட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியன்ஷ் ஆர்யா 16 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும் அவுட் ஆகினர். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்களிலும், ஷஷாங்க் சிங் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து களம் கண்ட நேஹால் வதேரா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் நேஹால் வதேரா 33 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.