ஐபிஎல்: பிளே ஆஃப் கனவில் கொல்கத்தா... ராஜஸ்தான் பந்துவீச்சு!
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்று நடக்கும் 53வது லீக் சுற்றுப்போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்று மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. ராஜஸ்தான் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 3 வெற்றி, 8 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி 10 போட்டிகளில் 4 வெற்றியுடனும், 5 தோல்வி, 1 போட்டி மழையால் ரத்து என புள்ளிப் பட்டியலில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இனி ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா போட்டியாக இருக்கும் என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வகையில் களமிறங்குவார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்க முயல்வார்கள் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
கொல்கத்தா அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு சிக்கலின்றி தகுதி பெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது 3 ஆட்டங்களிலாவது வென்றால் வாய்ப்பில் நீடிக்கலாம்.