Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#INDvsBAN | டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

07:02 PM Oct 06, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Advertisement

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் ‘ஒயிட்வாஷ்’ ஆனது. மொத்தம் 3 டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. 

2வது போட்டி டெல்லி (அக்.9), 3வது போட்டி ஹைதராபாத்தில் (அக்.12) நடக்க உள்ளன. ரோகித், கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் டி20ல் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் ஹர்திக், சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : “பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்” – திருடப்போன வீட்டில் கடிதம் எழுதிய திருடன்… #Britain -ல் சுவாரசியம்!

ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியிலும் மஹமதுல்லா, மெஹிதி ஹசன், தன்ஸித் ஹசன், தவ்ஹித் ஹ்ரிதய், பர்வேஸ் உசைன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், முதல் டி20 போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Tags :
bowlindian teamINDVsBANNews7Tamilnews7TamilUpdatesTosswon
Advertisement
Next Article