For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிரடி காட்டிய இந்திரன் -சந்திரன் இணை... முதல் நாளில் இந்தியா 339 ரன்கள் குவிப்பு!

06:41 PM Sep 19, 2024 IST | Web Editor
அதிரடி காட்டிய இந்திரன்  சந்திரன் இணை    முதல் நாளில் இந்தியா 339 ரன்கள் குவிப்பு
Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 339 ரன்களை குவித்தது.

Advertisement

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோஹித் சர்மா 6 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் டக் அவுட் ஆனார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விராட் கோலி 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. தொடர்ந்து ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

6 விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில் அஸ்வின், ஜடேஜா இணை களமிறங்கியது. இந்த இணை அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினின் 6-வது சதம் இதுவாகும். சொந்த மண்ணில் இரண்டாவது சதமாகும்.

ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. வங்கதேசம் தரப்பில் ஹாசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நஹித் ராணா மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Tags :
Advertisement