For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புரோ கபடி லீக் | வெற்றி யாருக்கு? ஹரியானா - ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்!

புரோ கபடி லீக் தொடரில் பிளே ஆப் சுற்று இன்று தொடங்குகிறது.
07:29 AM Oct 25, 2025 IST | Web Editor
புரோ கபடி லீக் தொடரில் பிளே ஆப் சுற்று இன்று தொடங்குகிறது.
புரோ கபடி லீக்   வெற்றி யாருக்கு  ஹரியானா   ஜெய்ப்பூர் அணிகள் இன்று மோதல்
Advertisement

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் நடந்து முடிந்தன. அதன்படி, அன்றை தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 54-26 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisement

தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யுபி யோத்தாஸ் அணி யு மும்பா அணியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர். ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

முடிவில் அதிரடியாக ஆடிய யுபி யோத்தா அணி 35-32 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில், 33-18 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் 8வது அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அந்த வகையில், புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 8 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த நிலையில், பிளே ஆப் சுற்று இன்று (அக்.25) தொடங்குகிறது. அதன்படி, இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மோதுகின்றன. தொடர்ந்து, 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி பாட்னா பைரட்ஸை எதிர்கொள்கிறது.

Tags :
Advertisement