For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#GunShot | Americaவில் பிரபல இந்திய மருத்துவர் சுட்டுக் கொலை!

06:17 PM Aug 26, 2024 IST | Web Editor
 gunshot   americaவில் பிரபல இந்திய மருத்துவர் சுட்டுக் கொலை
Advertisement

அமெரிக்காவில் திருப்பதியை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ் பாபு பெராம்ஷெட்டி (63).  இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர் அமெரிக்காவின் டஸ்கலூஸாவின் அலபாமா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மருத்துவத் துறையில் 38 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் ஆவார்.

இந்த சூழலில் இவர், அலபாமா நகரில் ’கிரிம்ஸன் கேர் நெட்வொர்க்’ என்ற மருத்துவக் குழுவை நிறுவி அதன்மூலம் டஸ்கலூஸா மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் மருத்துவச் சேவை செய்து வந்தார். இவரின் சேவையை பாராட்டும் விதமாக, டஸ்கலூஸா பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் பல சமூக சேவைகளை செய்து வந்தார்.

கொரோனோ காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பாகக் கவனித்து சிகிச்சையளித்தமைக்காக இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி அலபாமா நகரில் மருத்துவர் ரமேஷ் பாபு பெராம்ஷெட்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement