For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

03:41 PM Feb 04, 2024 IST | Jeni
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது   விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யேந்திர சிவல். இவர் ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே இந்திய தூதரக அதிகாரி சத்யேந்திர சிவல், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை சார்ந்த நாட்டின் முக்கிய தகவல்களை சத்யேந்திர சிவல் பகிர்ந்ததாகவும், இந்திய ராணுவ தளவாடங்கள் குறித்த தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்புக்கு தெரிவித்ததாகவும், உத்தரப்பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் மீரட்டில் தூதரக அதிகாரி சத்யேந்திர சிவலை, உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். தொடர்ந்து சத்யேந்திர சிவலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்தது நிரூபனமானது.

இதையும் படியுங்கள் : மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும்போது, அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரின் நிலைகள், பாதுகாப்புத்துறையின் நடவடிக்கைகள், வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை சத்யேந்திர சிவல் கேட்டறிந்ததும், அவற்றை இடைத்தரகர்களின் உதவியுடன் ஐஎஸ்ஐ அமைப்புக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags :
Advertisement