For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் நியமனம்...!

11:14 AM Jan 28, 2024 IST | Web Editor
இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் நியமனம்
Advertisement

துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரீத்தி ரஜக் இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றார்.

Advertisement

விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜக் கடந்த 2022 டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார்.  இதையடுத்து, சிறந்த முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.= இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "ஹவில்தார் பிரீத்தி ரஜக் இன்று சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்; ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் சென்ற கப்பலில் தாக்குதல் | மீட்பு பணியில் இறங்கிய இந்திய கடற்படை...!

சுபேதார் பதவியை முதன்முறையாக பெண் ஒருவர் வகிப்பது இந்திய ராணுவத்திற்கு பெருமையான தருணமாகும். பிரீத்தி ரஜக்கின் சாதனை இளைய தலைமுறை பெண்கள் இந்திய ராணுவத்தில் இணைவதற்கு ஊக்கமளிக்கும்." என்று தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் பிரீத்தி ரஜக்கும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுபேதார் ப்ரீத்தி ரஜக் தற்போது இந்தியாவில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்பில் ராணுவ துப்பாக்கி சுடும் பிரிவில் (AMU) பயிற்சி பெற்று வருகிறார். அவரது சிறந்த சாதனை இளம் பெண்களை இந்தியாவில் சேர முன்வருவதற்குத் தூண்டும். ராணுவம் மற்றும் தொழில்முறை படப்பிடிப்பில் தங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை உருவாக்குகிறது.

Tags :
Advertisement