For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை - அதிபர் டிரம்ப்!

பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
10:21 AM Apr 26, 2025 IST | Web Editor
பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை   அதிபர் டிரம்ப்
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நான் மிகவும் நெருக்கமாக உள்ளேன். காஷ்மீருக்காக இரு நாடுகளும் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த சண்டை நடைபெற்று வருகிறது.

பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இரு நாடுகளுக்கு இடையே ஆயிரத்து 500 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நிலவுகிறது. ஆனால், இந்த பிரச்சினையை ஏதேனும் ஒரு வழியில் இரு நாடுகளும் தீர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன். இருநாட்டு தலைவர்களையும் எனக்கு தெரியும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பதற்றம் நிலவுகிறதுஎன்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement