For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை - மத்திய அரசு அதிரடி!

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவின் தடை விதிக்கப்பட்டுள்ளது.
11:22 AM Apr 28, 2025 IST | Web Editor
16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை   மத்திய அரசு அதிரடி
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா். பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இந்தியர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக தவறான, அவதூறான தகவல்களைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவின் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags :
Advertisement