For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரவு விருந்தில் சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு இன்று இரவு விருந்து அளித்தார்.
09:25 PM Aug 07, 2025 IST | Web Editor
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு இன்று இரவு விருந்து அளித்தார்.
ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் இரவு விருந்தில் சந்திப்பு
Advertisement

Advertisement

டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு இன்று இரவு விருந்து அளித்தார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணித் தலைவர்கள் நேரடியாகச் சந்திக்கும் முதல் நிகழ்வு இதுவாகும்.

இதில், திமுகவின் கனிமொழி, டி.ஆர். பாலு, திருச்சி சிவா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த இரவு விருந்தின்போது, தேர்தல் வெற்றிக்குப் பின் எதிர்காலத்தில் கூட்டணிச் செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பீகாரில் நடைபெறவிருக்கும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) குறித்து விவாதிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதை எதிர்த்து ஒரு கூட்டு வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான கூட்டு வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், பீகாரில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு ஒரு எதிர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags :
Advertisement