ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏக்கள்: ஹரியானாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு!
எனவே, ஹரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனிடையே, ஹரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் ஆகியோர் முன்னிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மூன்று சுயேட்சை வேட்பாளர்களும், “நாங்கள் பாஜக தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். எங்கள் ஆதரவை காங்கிரஸுக்கு நீட்டிக்கிறோம். பாஜக ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சைகளின் ஆதரவைக் கொண்டே ஆட்சியமைத்தது.
ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்ததால் அங்கு ஆட்சி கவிழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஹரியானாவில் பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.